மதியம் திங்கள், 17 டிசம்பர், 2007

நாளை நமதா?

வேதபகுதி:யாக்கோபு 4 : 13 - 15


நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. வசனம் 14



சந்திரன் பெரிய தொழில் அதிபர். பண ஆசை பிடித்தவர். பணம் சம்பாதிப்பதுதான் அவரது பிரதான நோக்கம். அவரது பழைய நண்பர் ஜெயராஜ். சந்திரனிடம் எதற்காக இவ்வாறு பணம் பணம் என்றே ஓடிக்கொண்டிருக்கிறாய்? இருப்பது போதும் என்று அதிலே திருப்தி அடையவேண்டியதுதானே என்று கேட்டார். அதற்கு சந்திரன் கோபமாக, "நீ ஒரு முட்டாள். இந்தக் காலத்தில் பணம் இல்லவிட்டால் உலகில் மதிப்பே கிடையாது" என்றார். அன்று இரவே சந்திரனுக்கு நெஞ்சுவலி வந்து அவர் உயிர் பிரிந்தது.



நமது சுயபெலத்தை நம்பி, இறைவனை மறந்துவிடுகிறோம். தன்னம்பிக்கை வேண்டும். அதோடு தேவகிருபை அவசியம். சுய பெலத்தை மாத்திரம் நம்புகிறவர்கள் ஏராளம். அதைச் செய்வேன், இதைச் சாதிப்பேன் என்று கூறுபவர்கள் பலர் உண்டு.




நாளை நடப்பது நமக்குத் தெரியாது. வசனம் 14ல் நமது ஜீவன் புகையைப் போன்றது. ஜீவன் மீது அதிகாரமுடையவர் கிறிஸ்து ஒருவர் தான். சுய நம்பிக்கை அழிந்துபோகிறது.



நாம் செய்ய வேண்டியது,

தேவனுடைய கிருபையை முன் நிறுத்தவாண்டும். ஆண்டவருக்குச் சித்தமானால், தேவன் எனக்கு ஆயுசை, பெலனை கொடுத்தல் இதைச் செய்வேன் என்று சொல்லவேண்டும்.



சிந்தனை: உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன். என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் - சொல்லுகிறோமா?


ஜெபம்: தேவனே உம்முடைய கிருபை ஒவ்வொரு நாளும் என்னைத் தாங்குவதாக. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்