வேதபகுதி:யாக்கோபு 4 : 16 - 17
ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதை செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும். வசனம் 17
சுந்தர் தன் நண்பர்களோடு தன் கிராமத்திற்குச் செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு பெரியவர் (படிக்காதவர்) பாபநாசம் செல்ல எந்தப் பேருந்தில் ஏற வேண்டும் என்று கேட்டார். சுந்தர் அவரை சங்கரன்கோவில் பேருந்தில் ஏற்றிவிட்டான். தன் நண்பர்களோடு தான் செய்ததைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டான். தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனது தகப்பனார் இரவில் வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். எதற்காக இவ்வளவு நேரம் ஆனது என்று சுந்தரின் அம்மா கேட்டார்கள். தகப்பனார் தான் வந்த பேருந்து காட்டுப்பாதையில் பிரேக் டவுண் ஆகியதாகவும், அடையாளம் தெரியாத ஒரு வாலிபன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறினார். இதைக் கேட்ட சுந்தர் சுக்கு நூறாய் உடைந்தான். மனம் திருந்தினான்.
தீமையான காரியத்தைச் செய்வதிலும், பேசுவதிலும் வரும் புகழ்ச்சி, பாராட்டு யாவுமே பாவம்.
நன்மை செய்ய முடியும் என்றால் அந்த நன்மையை, உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். செய்யாமற்போனால் பாவம். 38 வருடமாய் வியாதி கொண்டிருந்த மனிதனுக்கு நன்மை செய்ய ஒருவரும் இல்லை. இதைப்போல் எத்தனை பேர் உன்னை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
சிந்தனை: நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்? தீமைக்குத் தீமை செய்கிறோமா? அல்லது நன்மை செய்கிறோமா?
ஜெபம்: தேவனே நான் தீமைக்குத் தீமை செய்யாமல் நன்மையை மட்டுமே செய்ய என்னைப் பெலப்படுத்தும் . ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக