மதியம் புதன், 5 டிசம்பர், 2007

ராஜரீகப் பிரமானம்

வேதபகுதி:யாக்கோபு 2:8 - 13


உன்னிடத்தில் நீ அன்புகூறுகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக வசனம் 8.



உலகில் சட்டங்கள் முக்கியம். சட்டங்களைக் கைக்கொண்டு கீழ்ப்படிய வேண்டும். சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குத் தண்டனை உண்டு.



பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்கிறோம், நாம் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தால் நமக்குத் தண்டனை. பயணச்சீட்டு இருந்தால் மட்டும் போதாது, உரிய பயணச்சீட்டு வேண்டும்.





சட்டங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எல்லாச் சட்டங்களும் முக்கியமானவை. ஒன்றுக்குக் கீழ்ப்படிந்து மற்றொன்றிற்குக் கீழ்ப்படியாமலிருக்க முடியாது. ஒன்றைக் கைக்கொண்டு மற்றொன்றைக் கைக்கொள்ளாமலிருக்க முடியாது.



கிறிஸ்தவர்கள் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் முன்பாக நீதியாக நடக்க வேண்டும். அது அன்பினால் மட்டுமே முடியும்.



இறையரசின் சட்டங்கள் திருமறையில் உள்ளன. திருமறையை நன்கு படித்து அவற்றை அறிந்து கொள்ளுவோம். அதன்படி அனைத்துக்கும் கீழ்ப்படிவோம். தேவன் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்ற வேதவசனத்தின் படி நாம் இறைவனிடத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் அன்பு கூறுவோம்.




சிந்தனை: பிறரிடம் நான் காட்டும் அன்பு என்னிடத்தில் நான் காட்டும் அன்புக்குச் சமமானதா?




ஜெபம்: ஆண்டவரே என்னில் நான் அன்புகூறுவது போல உம்மிடத்திலும் பிறரிடத்திலும் அன்பு கூற கிருபை தாரும். ஆமேன்




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்



Blog Directory