மதியம் செவ்வாய், 4 டிசம்பர், 2007

பட்சபாதம்

வேதபகுதி:யாக்கோபு 2 : 1 - 7


விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக வசனம் 1



ஆள்பார்த்துச் செயல்படுதல் மனிதர்களின் இயற்கையான குணங்களுள் ஒன்று. இறைமக்களுக்குள்ளும், திருச்சபையிலும் இப்பண்பு விசுவாசிகள் நடுவே காணப்படுவதைக் கண்ட யாக்கோபு வேதனையோடு எச்சரிக்கிறார். ஏழை, செல்வந்தர்; வேண்டியவர், வேண்டாதவர்; உறவினர், உறவினர் அல்லாதோர் என்று பட்சபாதம் காட்டுகிறோம்.



ஆவியின்படி பிறந்த நாம் சமமாக்கப்பட்டவர்கள். நாம் நமக்குள் ஏற்றத் தாழ்வு பாராட்டக்கூடாது. விசுவாசத்தையும், பக்தியையும் பாரபட்சம் சீர் குலைத்துவிடும். கடவுள் பட்சபாதமுள்ளவர் அல்ல.




பணமும், அந்தஸ்தும், உறவும், ஜாதியும் விசுவாசிகள் நடுவே பெயரளவில் கூட காணப்படக்கூடாது. பட்சபாதத்தின் அடிப்படையில் ஒருவரை உயர்வாக மதிப்பதும், ஒருவரைத் தாழ்வாக கனவீனப்படுத்துவதும் கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது. தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதர்களிடையே பட்சபாதம் காட்டுவது தீய நோக்கத்தை உள்ளடக்கியது. தன்னலத்தைப் பிரதானமாகக் கொண்டது. ஆகவே நாம் ஒருவருக்கொருவர் பட்சபாதம் காட்டாமல் நாம் தேவசாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று எண்ணி ஒருவர் பேரில் ஒருவர் சமமாக அன்புகூரக்கடவோம். தேவன் அன்புள்ளவராயிக்கிறார்.




சிந்தனை: நாம் எப்படிப்பழகுகின்றோம்? சமமாகப் பழகுகின்றோமா? அல்லது பட்சபாதம் உள்ளவர்களாகப் பழகுகின்றோமா?



ஜெபம்: தேவனே திருமறையின் அடிப்படையில் அனைவரிடமும் சமமாகப் பழக அருள்புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்