மதியம் வெள்ளி, 7 டிசம்பர், 2007

கடிவாளம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 1 - 3


ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷன். வசனம் 2



நமது உடலில் உள்ள உறுப்புகளில் நாவு மிகவும் சிறியது. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்கிறது. மனிதனின் நற்கிரியை அல்லது துற்கிரியைகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.



ஒரு பெரிய கொடிய முரட்டுக் குதிரையின் வாயில் ஒரு கடிவாளம் பொட்டு அதை நமக்கேக் கீழ்ப்படிய வைத்து விடுகிறோம். நாம் சொல்லுகிற வேலையைச் செய்கிறது. நாம் சொல்கிற திசையில் செல்கிறது. குதிரை ஒரு பலமுள்ள மிருகம். எந்திரங்களின் சக்தியைக் குதிரையின் பலத்தோடு ஒப்பிட்டு அறிகிறோம். போர்களிலும், வண்டி இழுப்பதற்கும் குதிரைகளைப் பயன்படுத்தினோம். குதிரையின் பலமும், இயக்கமும் கடிவாளத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது.





நமது நாவைப் பயன்படுத்திக் கடவுளைத் துதிக்க வேண்டும். புகழ வேண்டும், பிறரைப் பாராட்ட வேண்டும், சிந்தித்துப் பேசுங்கள், சிறந்ததையே பேசுங்கள்.



சிந்தனை: நான் நாவடக்கமுள்ள விசுவாசியா?


ஜெபம்: தேவனே நான் பூரணமாய் வாழ பெலனும் தூய மனமும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்