மதியம் திங்கள், 10 டிசம்பர், 2007

விஷம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 7 - 8


நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது. வசனம் 8



மனிதனால் கூடாதது தேவனால் கூடும். தேவன் நமது நாவை அடக்கக் கூடும். நம்மால் கூடாத ஒன்றை, நடப்பிக்கக் கூடிய தேவனிடம் ஒப்படைக்க வேண்டும்.



நாவை ஏன் மனிதனால் அடக்கக்கூடாது? மனிதன் தனது அறிவாலும், ஆற்றலாலும் காட்டில் வாழ்வன, நாட்டில் வாழ்வன, கடலில் வாழ்வன அனைத்தையும் அடக்கி ஆள்கிற திறமையை, ஆசீர்வாதத்தை படைப்பிலேயே யானை, புலி, சிங்கம், காண்டாமிருகம், உருவத்திலும் சக்தியிலும் வல்ல, பெரிய அனைத்து விலங்குகளையும் அடக்கிக் கீழ்ப்படுத்திவிட்டான் (ஆதியாகமம் 1 :26).





ஆனால் நாவை மட்டும் அடக்க மனிதனால் ஏன் முடியவில்லை. நாவு கொடியது, அது நஞ்சு போன்றது. நாவில் இருந்து புறப்படும் வார்த்தைகள் விஷம் நிறைந்ததாக இருப்பதால் அது பிறரை மனமடிவாக்கி சோர்வுறச் செய்து செயல்படவிடாமல் முடமாக்கிவிடுகிறது.



ஆனால் விசுவாசிகளான நாம் விஷம் நிறைந்த நம் நாவை கிறிஸ்துவின் கிருபையினால் அடக்கி ஆளும் போது நாம் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளமுடியும்.



சிந்தனை: நாம் நம்முடைய நாவை எப்படிப் பயன்படுத்துகிறோம்?


ஜெபம்: தேவனே என் நாவை உம்முடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதற்குப் பயன்பட பெலத்தையும் ஞானத்தையும் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்