மதியம் வியாழன், 13 டிசம்பர், 2007

எதினால்?

வேதபகுதி:யாக்கோபு 4 : 1 - 4


உங்களுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் எதினாலே வருகிறது. வசனம். 1



சண்டைகள் ஏன்? எதினால் என ஆராய்ந்து பார்க்கும்போது அவைகளின் அடித்தளமாக ஒரு மனிதனுடைய இச்சையே காணப்படும். இதையே வேதம் கூறுகிறது. ஆசை என்பது சாதாரணமானது. இச்சை என்பது அதை விட ஒரு படி மிகவும் மோசமானது.



தேவனிடம் நாம் ஜெபித்தால், நம்முடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். கேட்பதேல்லாம் கிடைத்துவிடும் என நாம் போதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது? "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1). இதன் பொருள் என்னவென்றால் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறபடியால் என்னை தேவையிலிருக்கவிடமாட்டார். எனவே தேவன் நம்முடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றாமல் நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றுகிறார்.



சாத்தானின் குணம் - இச்சை

சாதாரண மனித குணம் - ஆசை

சாதிக்கும் தேவ மனிதனின் குணம் - தேவ சித்தம்


ஆவிக்குரிய மனிதனின் குணம்: தேவனுடைய சித்தம், விருப்பம் ஆகியவற்றோடு இணைந்துவிடும்போது அந்த மனிதனின் விருப்பங்கள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவைகளாயிருக்கும். என்வே அவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதி 10:24).




சிந்தனை: நாம் எப்படிப்பட்ட குணத்தை உடையவர்களாக இருக்கிறோம்?


ஜெபம்: தேவனே உம்முடைய இருதயத்தின் எண்ணங்களும் ஏக்கங்களும் என் விருப்பங்களாய் மாற கிருபை செய்யும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

1 comments:

Ammu சொன்னது…

\\சாத்தானின் குணம் - இச்சை

சாதாரண மனித குணம் - ஆசை

சாதிக்கும் தேவ மனிதனின் குணம் - தேவ சித்தம்
\\

மிகச் சரியான வார்த்தைகள்!