மதியம் செவ்வாய், 11 டிசம்பர், 2007

நடத்தை

வேதபகுதி:யாக்கோபு 3 : 9 - 13


தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். வசனம் 13



ஒருவனுடைய தரம், அவனுடைய கிரியைகள் அல்லது நடக்கையினால் தெரிய வருகிறது. அவனுடைய உள்ளத்தில் இருப்பதே அவனுடைய பேச்சிலும். செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நாமும் நல்லவர்களானால், நல்லதையே பேசுவோம், நன்மையையே செய்வோம்.



நமது பேச்சும் செயலும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. பேச்சு வாயிலிருந்தும் செயல்பாடு உள்ளத்திலிருந்து வந்தாலும் அவை இரண்டும் ஒரே மனிதனின் தரத்தையே வெளிப்படுத்துகிறது. நாவினால் கடவுளைத் துதிக்கிறோம். அதே நாவினால் கடவுள் படைத்த மனிதனைச் சபிக்கிறோம். துதித நாவு தூற்றக்கூடாது. புகழ்ந்த நாவு இகழக்கூடாது. நாவின் செயல்பாடு இரண்டல்ல . ஒன்றே தேவை. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, செய்யவும் முடியாது. ஒன்றையே தெரிந்து கொள்ளவேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்.





ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இரண்டு வகையான ருசி தரக்கூடிய நீர் சுரக்காது. ஒருவகை மரம் மற்றொரு வகையான கனி தராது. நன்மையே செய்பவராகச் சுற்றித்திருந்த இயேசு நாதரின் பிள்ளைகள் தீய, தீமையான செயல்களைச் செய்யமாட்டார்கள் . துதித்தலும் சபித்தலும்; தித்திப்பும், கசப்பும் நம்முடைய நாவிலிருந்து வெளிவரமுடியாது. வெளிவரவுங் கூடாது. இரண்டல்ல ஒன்றே தேவை.



சிந்தனை: நான் நன்மையானவைகளை, நல்லவைகளைப் பேசிகிறேனா?


ஜெபம்: ஆண்டவரே நான் நல்லதைப் பேசவும் நல்லதைச் செய்யவும் என்னை வழினடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்