மதியம் புதன், 12 டிசம்பர், 2007

பரம ஞானம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 14 - 18


பரத்திலிருந்து வருகிற ஞானமோ....நற்கனிகளாலும் நிறைந்ததாயுமிருக்கிறது. வசனம் 17.



இக்காலத்தில் அன்பைக் குறித்து அதிகமாய்ப் பிரசங்கிக்கப்படுகிறது. இயெசு நாதர் வாழ்ந்து காட்டிய அன்பு, சத்தியத்தோடு இணைத்துப் பரத்திலிருந்து ஊற்றப்பட்டு ஞானிகளிடம் காணப்படுகிறது.



நோவா, மக்கள் கேலி செய்தபோதும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் மீது கொண்ட அன்பால் பேழையைச் செய்தான். மோசே இஸ்ரவேலரின் மீது கொண்ட அன்பால் திறப்பில் நின்றான். யோசேப்பு தன்னை வெகுவாய்ப் பகைத்த சகோதரர்களை அவர்கள் மீது கொண்ட அன்பினிமித்தம் பஞ்சத்தினின்று காப்பாற்றினான்.





கசப்பான வைராக்கியம், விரோதம், பொய் சொல்லுதல் பேய்த்தனமானது, பாதாளத்திலிருந்து புறப்பட்டு வருபவை. அசுத்தமானவை. ஆனால், பரமஞானம் பரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஞானம், இணக்கமுள்ளது, இரக்கமுள்ளது, சாந்தமுள்ளது. சமாதானத்திற்கு நேராய் வழிநடத்துவது.



நமது நாவு பரம ஞானத்தினால் நிறைந்திருக்குமானால் நீதியின் கனியாகிய அன்பையே வெளிப்படுத்தி, சமாதானத்தை நடப்பிக்கும்.



சிந்தனை: என்னுடைய செய்கைகள் பரம ஞானத்தால் நிறைந்திருக்கிறாதா?


ஜெபம்: ஆண்டவரே என்னுடைய செய்கைகள் , செயல்கள் உம்முடைய பரம ஞானத்தால் நிறைந்து அன்புடனும் சாமாதானத்துடனும் நடக்க கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்