வேதபகுதி:யாக்கோபு 4 : 5 - 6
தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். வசனம் 6
தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தாழ்மையாக நடக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே உள்ள சுயம் என்ற பெருமை குணம் நாம் தாழ்மையாக நடப்பதைத் தடுத்துவிடுகிறது. இதை ஒருவரும் மறுக்க முடியாது.
ஆதியில் சாத்தானும் தேவதூதனாயிருந்தவன் தான், பெருமையினால் கீழே தள்ளப்பட்டான். ஆதாமும் பெருமையினால் தன் தவறை ஒத்துக் கொள்ள இயலாமல் ஏவாள் மீதும் தேவன் மீதும் பழியைச் சாட்டுகிறான். நம்முடைய இரத்தத்திலேயே ஊறிப்போன நிறப்பெருமை, பணப்பெருமை, இனப்பெருமை ஆகியவை மாறித் தாழ்மை நமக்குள் வரும்போது மட்டுமே தேவகிருபையை நாம் பெற்றுக் கொள்ளத் தகுதியடைகிறோம்.
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்(1 பேதுரு 5:5) என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவும் தன் வாழ்க்கையில் சரீரப்பிரகாரமாக இவ்வுலகில் அவரை வளர்த்த பெற்றாருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். பிலிப்பியர் 2 :8 ல் கூறியுள்ளபடி பிதாவுக்கும் கீழ்ப்படிந்தார், மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகித் தம்மைத் தாமே தாழ்த்தினார்.
சிந்தனை: கீழ்படிதலே தாழ்மை, தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை.
ஜெபம்: ஆண்டவரே என்னைத் தாழ்த்தி உம் பாதம் வருகிறேன், பெருமையை என்னை விட்டு அகற்றும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
1 comments:
பெருமையே எல்லா பாவங்களும் மூலக்காரணம் எனக் கூறலாம்!
மிக அருமயாக வேதக்குறிப்புகளுடன் எழுதியுள்ளீர்கள்,
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
கருத்துரையிடுக