வேதபகுதி: யாக்கோபு 1 : 1 - 4
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் வசனம் 2,3
பொதுவாகப் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் சோதனைகளில் மாணவர்கள் தவறாது கலந்துக் கொள்ளும்போது இறுதித் தேர்வில் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சிபெறுகிறதை அறிந்திருக்கிறோம்.
வாழ்க்கை என்னும் பள்ளியில் நாம் பல பாராட்டுகளுக்கு உட்படும்போது பல பிரச்சனைகள். துன்பங்கள் மூலம் நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய விசுவாசம் பரீட்சிக்கபடுகிறது. நான் உபத்திரவப்பட்டது நல்லது அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.
இயேசு 40 நாள் உபவாசிக்கும்போது அவருக்கு சோதனை வந்தது. உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சைபாராதிருப்பாயாக என்றார்.
இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையின் முன்பாதிரி. அவரைப்போல சோதனை நேரத்தில் பொறுமையோடு இருப்போம். விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம்.
சிந்தனை: உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மைபாரட்டுகிறோம்.
ஜெபம்: ஆண்டவரே எங்கள் உபத்திரவத்தில் பொறுமையோடு இருந்து விசுவாசத்தைக் காத்துக் கொள்ள பெலன் தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக