மதியம் திங்கள், 8 அக்டோபர், 2007

என் துயரம்

"என் ஜனமே, நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்?"மீகா 6:3


மனிதன் ஏன் கவலைப்படுகிறான்? கவலைக்குக் காரணமே இருப்பதில்லை. யோனாவுக்கு ஆமணக்குச் செடி பட்டுப் போனதைக் குறித்துக் கவலை. மார்த்தாளுக்கு மரியாள் உதவவில்லை என்ற கவலை. சிலருக்கு எதிராளி நன்றாக இருக்கிறானே என்ற கவலை. இவ்வசனம் கூறும் விசனம்(கவலை) என்ன? தவறு செய்த மனிதன் எப்படி ஆண்டவரோடு ஒப்புரவாகலாம் என்ற கவலைதான் காரணம். இது நியாயமானதுதானா? தவறு செய்யும் முன்பு அல்லவா இதை யோசிக்க வேண்டும். ஆனாலும் ஆண்டவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறவர். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்(சங்கீதம் 103:12). உன் பாவங்களை நினைக்க மாட்டேன் என்றும் ஆண்டவர் சொல்லுகிறார். அப்படியானல் இது வீண் கவலை. வாருங்கள் என்னிடம் என்று அழைக்கும் ஆண்டவரிடம் பாரங்களை இறக்கி வைப்பது அல்லவா நம் வேலை. நாம் ஏன் தேவை இல்லாததைச் சுமப்பானேன்.



சிந்தனை: தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள். 28:13

ஜெபம்: என் பாவங்களை உமது தூய இரத்தத்தால் கழுவி பரிசுத்தப்படுத்தும் ஆண்டவரே. ஆமேன்.