மதியம் சனி, 13 அக்டோபர், 2007

ஆசிர்வாதக் குறைவு

வேதபகுதி:மீகா 6:13 - 16

நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய். வசனம். 14





சாப்பாட்டால் அநேகருக்குப் பிரச்சனை உண்டு. சிலருக்கு இனிப்பு சாப்பிடக்கூடாது, காரணம் சர்க்கரை வியாதி. சிலருக்கு பானை வயிறு என்பார்கள், கொஞ்சம் சாப்பிட்டாலும் எப்பொழுதும் வயிறு பெரிதாகவே இருக்கும். சிலரை நாய் வயிறு என்பார்கள், நாய் சாப்பிட்டுத் திருப்தியானாலும் இன்னும் ஆகாரம் இருக்குமானால் எதாவது ஒரு நாய் வருகிறதென்றால் அதைத் தின்ன விடாமல் இது வேகமாக அதைத் தின்ன ஆரம்பிக்கும், ஆனால் வயிறு பெரிதாகத் தெரியாது.



ஆனால் கடவுளின் ஆசிர்வாதம் மட்டுமே நம்மை திருப்தியடையச் செய்கிறது. உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்கீதம் 65:4) என்று தாவீது சொல்லுகிறார். அப்படியானால் தேவ ஆலயம் அது பரிசுத்தமானது, அது ஆண்டவரின் வீடு, அங்கே நமக்கு நன்மையும் திருப்தியும் உண்டாகிறது. நாம் ஆலயத்திற்கு ஒழுங்காக செல்கிறோமா? ஆலயத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? திருமணம் போன்ற காரியங்களுக்கா? இல்லை கல்வி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் படிப்பதற்கான இடம் கிடைப்பதற்கா? இல்லை கமிட்டிகளில் பதவி வகிப்பதற்கா? இல்லை ஊழியக்காரர்களைப் பற்றிக் குறை கூறுவதற்கா? இல்லை ஆலயக் காரியங்களில் ஈடுபடுபவர்களை பற்றிக் கேலி பேசுகிறவர்களாக இருக்கிறோமா?. இப்படிப் பட்டக் காரியங்கள் நமக்கு ஆசிர்வாதக் குறைவைத் தான் கொண்டு வரும்.ஆனால் பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தரைத் தொழுது கொண்டால் நமக்கு ஆசிர்வாதமே.



ஆலயத்திற்கு தசமபாகம் கொடுக்கும் போது இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசிர்வாதத்தைத் தருவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார் (மல்கியா 3:10). உற்சாகமாய்க் கொடுத்தால் தேவன் நம் மேல் பிரியமாய் இருப்பாரே. ஆகவே ஆலயத்திற்குக் கொடுப்போம். ஆண்டவரின் ஆசிர்வாதம் பெறுவோம்.




சிந்தனை: ஆலயம் தொழுவது சாலமும் நன்று.


ஜெபம்: உம்முடைய ஆலயத்தின் நன்மையால் என்னை திருப்தியாக்கி ஆசிர்வதியும் ஆண்டவரே. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்