"நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்து கொள்ளும்படி நினைத்துக் கொள்." மீகா 6:5
ஒரு ராஜா தன்னிடம் 10,000 ரூபாய் கடன் பட்டவனை அழைத்து நீ இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்து என்றான். ஆனால் அவனோ ஐயா நான் ஒரு ஏழை, திடுப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன், இன்னும் ஒரு வருடத்தில் அதைத் திரும்பச் செலுத்தி விடுகிறேன் என்றான். ஆனால் அந்த ராஜா அவன் கடனை மன்னித்து நீ திரும்பச் செலுத்த வேண்டாம், அது உனக்கு நன்கொடையாகட்டும் என்றார். ஆனால் அவனோ தன் எதிரே வந்த தன்னிடம் 100 ரூபாய் கடன் பட்டவனை அதைக் கொடுத்துத் தீர்க்கும் வரை காவல் துறையிடம் ஒப்படைத்தான். இதை அறிந்த ராஜா அவனை அழைத்து தாம் சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கி இவனையும் சிறையில் அடைத்தான்.
ஆண்டவர் நமக்குப் பாராட்டிய நன்மைகளை நினைவு கூற வேண்டும். மனுஷருடைய தப்பிதங்களை நாம் மன்னிக்காவிட்டால் நாமும் கடவுளின் மன்னிப்பை இழந்து விடுவோம். உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூற வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கர்த்தருடைய நீதியை நிலை நாட்டுவோம்.
சிந்தனை: கடவுள் பூரண சற்குணர். நாமும் பூரண சற்குணராயிருப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்கு விரோதமாய்க் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். ஆமேன்.
மதியம் செவ்வாய், 9 அக்டோபர், 2007
நீதிகளை நினை
Labels:
தின தியானம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக