"ஆயிரங்களான ஆட்டுக் கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ?. "மீகா 6:7
ஒரு நாள் இயேசு மார்த்தாள் வீட்டிற்குச் சென்றார். அவள் இயேசுவுக்கு விருப்பமான சுவையான பலகாரங்கள் கொடுக்க வேண்டும் என்று பல வேலைகள் செய்து கொண்டு இருந்தாள். ஆனால் அவள் சகோதரி மரியாள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள், மார்த்தாள் இயேசுவிடம் மரியாளைப் பற்றி குறை சொல்லும் போது மரியாள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். இயேசுவுக்கு உபசரணையை விட அவர் வார்த்தையைக் கேட்பதுவே அவருக்குப் பிரியம் என்பதை உணர்த்தினார்..
இங்கே மீகா ஆண்டவருக்கு எது பிரியம் என்ற கேள்வியை எழுப்புகிறார். ஆண்டவரை எப்படி ஆராதிக்க வேண்டும்? எப்படி ஆராதித்தால் ஆண்டவர் பிரியப்படுவார் என்பதே அதன் அர்த்தம். இன்றும் ஆண்டவரை பல வழிகளில் ஆராதிக்கிறோம். சிலர் ஆண்டவரை கெம்பீர சத்தமாய் ஆராதிக்கிறோம். வேறுசிலர் ஆண்டவரை அமைதியாகவும், சிலர் ஒழுங்கு முறைகளோடும் ஆராதிக்கிறார்கள். சிலர் ஆண்டவருக்கு உருவம் வைத்து ஆராதிக்கிறார்கள். ஆண்டவருக்கு எது பிரியம்? நம்மைப் பார்த்து ஒருவேளை இப்படிச் சொல்லுவாரோ? இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து உதட்டினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகி இருக்கிறது(மத்தேயு 15:8). நாம் எப்படி ஆண்டவரை ஆராதிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம்.
சிந்தனை: நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1.
ஜெபம்: என்னை ஜீவ பலியாக உமக்கு ஒப்புவிக்கிறேன், எற்றுக் கொண்டு வழி நடத்தும் ஆண்டவரே.
மதியம் செவ்வாய், 9 அக்டோபர், 2007
ஆண்டவரின் பிரியம்
Labels:
தின தியானம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக